search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    இளையான்குடி, கல்லல் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இளையான்குடி, கல்லல் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
    காரைக்குடி:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக காரைக்குடி உட் கோட்டத்திற்கு உட்பட்ட கானாடுகாத்தான் துணை மின் நிலையம், கல்லல் துணைமின் நிலையம் ஆகியவற்றிலிருந்து செல்லும் மின் தடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதனால் கானாடுகாத்தான் பிரிவில் கானாடுகாத்தான். ஆவுடைப்பொய்கை, உ.சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி, சொக்கலிங்கம்புதூர், நங்கபட்டி, நேமத்தான்பட்டி, நெற்புகப்பட்டி, திருவேலங்குடி, சூரக்குடி ஆகிய பகுதிகளிலும், கல்லல் மற்றும் கண்டரமாணிக்கம் பிரிவில் கல்லல், சாத்தரசம்பட்டி, செவரக்கோட்டை, கீழப்பூங்குடி, மேலப்பூங்குடி, கீழபுதுப்பட்டி, வெற்றியூர், வெற்றியூர் நால்ரோடு, தண்ணீர்பந்தல், சொக்கநாதபுரம், புளியங்குடிப்பட்டி, மாலைகண்டான், செம்பனூர், கீழக்கோட்டை, ஆலவிளாம்பட்டி, மேலபட்டமங்கலம், சிலந்தங்குடி, பி. கருங்குளம் ஆகிய பகுதிகளிலும் நாளை(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    இந்த தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

    இளையான்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின் துறை சார்பாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அடிக்கடி ஏற்படும் மின்தடையை குறைக்கும் வகையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இளையான்குடி துணை மின் நிலைய பகுதிக்கு உட்பட்ட இளையான்குடி, புதூர், கண்ணமங்கலம், தாயமங்கலம், சோதுகுடி, கருஞ்சுத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்சார வினியோகம் தடை செய்யப்படும் என மானாமதுரை செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×