என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பேக்கரியில் பணம் திருடிய 2 பேர் கைது

    பேக்கரியில் பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பேக்கரியில், நேற்று டீ குடிக்க 2 பேர் வந்தனர். அப்போது கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்தவர் எழுந்து சிறிது தூரம் சென்றிருந்த நேரத்தில், திடீரென 2 பேரும் சேர்ந்து கல்லாவில் இருந்த பணத்தை திருடி உள்ளனர். இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து அவர்களை பிடித்து கீழப்பழுவூர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் அரியலூர் மாவட்டம் மேட்டு ரத்னாபுரம் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரையின் மகன் அழகுதுரை(வயது 28), கீழப்பழுவூரை சேர்ந்த இப்ராஹிம் சேட்டின் மகன் சாதிக்பாட்சா (23) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×