என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மயிலாடுதுறையில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு, வீடாக சோதனை
Byமாலை மலர்20 Aug 2021 8:19 AM GMT (Updated: 20 Aug 2021 8:19 AM GMT)
மயிலாடுதுறையில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு, வீடாக சோதனை சுகாதார துணை இயக்குனர் தலைமையில் நடந்தது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை காலங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. தற்போது பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் டெங்கு கொசு பரவாமல் தடுக்க ஒருவார கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தொடங்கி உள்ளது.
அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை நகரில் டெங்கு கொசுக்களால் பாதிக்கப்படும் பகுதி என்று கண்டறியப்பட்ட பகுதிகளில் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் பிரதாப் தலைமையில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பாலு மற்றும் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று சோதனை செய்து கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த பணி 60 களப்பணியாளர்களுடன் தொடங்கியது. நாளொன்றுக்கு 6 வார்டுகள் வீதம் ஒரு வார காலத்திற்குள் நகரம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், பிளாஸ்டிக் கப்புகள் டயர்கள், தேங்காய் ஓடுகள், பிரிட்ஜ் எந்திரத்தின் பின்புறம் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மாடிகளில் தண்ணீர் வழிந்தோடும் பகுதிகளில் குப்பைகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொண்டால் டெங்கு கொசு உற்பத்தியாவது தடுக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
மேலும் டெங்கு கொசு மருந்து அழிக்கப்பட்டதுடன் நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அப்போது நகர் நல அலுவலர் மலர்மன்னன், சுகாதார ஆய்வாளர் பிச்சமுத்து, களப்பணி உதவியாளர் கணேசன், பூச்சியியல் வல்லுனர் சிங்காரவேலு மற்றும் களப்பணியாளர்கள் உடனிருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை காலங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. தற்போது பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் டெங்கு கொசு பரவாமல் தடுக்க ஒருவார கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தொடங்கி உள்ளது.
அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை நகரில் டெங்கு கொசுக்களால் பாதிக்கப்படும் பகுதி என்று கண்டறியப்பட்ட பகுதிகளில் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் பிரதாப் தலைமையில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பாலு மற்றும் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று சோதனை செய்து கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த பணி 60 களப்பணியாளர்களுடன் தொடங்கியது. நாளொன்றுக்கு 6 வார்டுகள் வீதம் ஒரு வார காலத்திற்குள் நகரம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், பிளாஸ்டிக் கப்புகள் டயர்கள், தேங்காய் ஓடுகள், பிரிட்ஜ் எந்திரத்தின் பின்புறம் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மாடிகளில் தண்ணீர் வழிந்தோடும் பகுதிகளில் குப்பைகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொண்டால் டெங்கு கொசு உற்பத்தியாவது தடுக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
மேலும் டெங்கு கொசு மருந்து அழிக்கப்பட்டதுடன் நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அப்போது நகர் நல அலுவலர் மலர்மன்னன், சுகாதார ஆய்வாளர் பிச்சமுத்து, களப்பணி உதவியாளர் கணேசன், பூச்சியியல் வல்லுனர் சிங்காரவேலு மற்றும் களப்பணியாளர்கள் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X