என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலவச குடியிருப்பு-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்த பொதுமக்கள்
Byமாலை மலர்19 Aug 2021 9:49 AM GMT (Updated: 19 Aug 2021 9:49 AM GMT)
மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை பெண்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் இலவச குடியிருப்பு வழங்க மனுக்கள் பெறப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக பிரதிவாரம் திங்கட்கிழமை கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்கு மனு பெட்டி வைத்து மனுக்கள் பெறப்பட்டு வந்தது.
தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக வருவதை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் தங்களது குறைகளை தொலைபேசி மூலம் தெரிவிக்க சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக (0421-2969999) என்ற தொலைபேசி எண்ணிற்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தெரிவிக்கலாம் எனவும்,மக்களிடமிருந்து வரப்பெறும் குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் நிவர்த்தி செய்திடும் வகையில் விரைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பொதுமக்கள் மனு அளிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில் இன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை பெண்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் இலவச குடியிருப்பு வழங்க மனுக்கள் பெறப்பட்டது.
இதையொட்டி மாற்றுத்திறனாளிகள், விதவைப்பெண்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் இன்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனு அளிக்க குவிந்தனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X