என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல்
    X
    மணல்

    சீர்காழி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்

    சீர்காழி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சிக்குட்பட்ட தத்தங்குடி கிராமத்தில் பழைய ஓ.என்.ஜி.சி திடல் அருகில் அனுமதி இன்றி அதே கிராமத்தை சேர்ந்த சக்தி வீரன் என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் மணல் ஏற்றி சென்றுள்ளனர்.

    இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதனை தடுத்து நிறுத்தி சீர்காழி தாசில்தார் சண்முகத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் சண்முகம் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் செய்து சீர்காழி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    இதுகுறித்து சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சக்திவீரனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×