என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    ஒடுகத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி

    ஒடுகத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த வளையல் காரப்பட்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி கஸ்தூரி (வயது 56). இவர் நேற்று முன்தினம் வீட்டு முன்பு தண்ணீரை கொண்டு சுத்தம் செய்தார். அப்போது பைப்பில் அடைப்பு ஏற்பட்டதால் பைப்பை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது பைப்பில் இருந்த பாம்பு அவரை கடித்துள்ளது. இதனால் கஸ்தூரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×