என் மலர்
செய்திகள்

விபத்து பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்குளம்:
மூலக்குளம் குயவர்பாளையம் டி.ஆர்.நகர் கருணாகரன்பிள்ளை வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). பந்தல் அமைக்கும் தொழிலாளி. நேற்று மதியம் அவர் மூலக்குளம்- பெரம்பை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தனியார் அச்சகம் அருகே சென்றபோது, திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து வடக்குப்பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






