என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான ராஜேந்திரன்
    X
    பலியான ராஜேந்திரன்

    தேவகோட்டையில் வீடு இடிந்து விழுந்து தொழிலாளி மரணம்

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வீடு இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை எஸ். எம்.எல். தெருவில் வசித்து வந்தவர் ராஜேந்திரன் (வயது62). இவர் மனைவி லட்சுமி மகன்கள் ராம் குமார், பெரியநாயகம் ஆகியோருடன் குடியிருந்து வந்தார்.

    ராஜேந்திரன் பழைய வீடுகளை இடித்து அந்த வீட்டில் உள்ள மரம் மற்றும் பொருட்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வந்தார்.

    மேலும் தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உள்ள வீடுகளை இடித்து அவற்றிலுள்ள ஜன்னல்களை எடுப்பதற்காக இரவு பகலாக பணியாளர்களை கொண்டு வேலை செய்து வந்தார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் அக்கம் பக்கம் தேடினர். ஆனால் அவர் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை கருணாநிதி மண்டபம் அருகே உள்ள வெள்ளையன் செட்டியாரின் பழைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தேவகோட்டை நகர போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்- இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து சென்றனர்.

    தேவகோட்டை தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு அதிகாரி ரவிமணி தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றினர். அப்போது அதில் ராஜேந்திரன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இறந்து 3 நாட்கள் ஆனதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் அந்த இடத்திலேயே அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    அவரது உடலை பார்த்து மனைவி மற்றும் மகன்கள் கதறி அழுதனர்.

    விசாரணையில் பழைய வீட்டை இடிக்கும்போது ராஜேந்திரன் இடிபாடுகளில் சிக்கி இறந்து இருக்கலாம் என தெரியவந்தது. இந்த சம்பவம் தேவகோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளளது.
    Next Story
    ×