என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஸ்பெண்டு
    X
    சஸ்பெண்டு

    போலீஸ் உயர் அதிகாரிகளை தரக்குறைவாக திட்டிய ஏட்டு சஸ்பெண்டு

    தேவகோட்டையில் போலீஸ் உயர் அதிகாரிகளை தரக்குறைவாக திட்டிய ஏட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு ஆடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.

    அந்த ஆடியோவில் பேசும் நபர் தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு, நகர் போலீஸ் இன்ஸ்பெக்டரை ஆபாச வார்த்தைகளால் திட்டுவதாக இருந்தது.

    இந்த ஆடியோ பேச்சு போலீசாரின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து ஆடியோ தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

    அதன்படி போலீசார் நடத்திய விசாரணையில், துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டரை தரக்குறைவாக பேசியது தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு மூர்த்தி என தெரியவந்தது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ஏட்டு மூர்த்தியை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். தற்போது மூர்த்தி சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

    காவல்துறையில் பணிபுரிபவர்களாக இருந்தாலும், பொதுமக்களாக இருந்தாலும் தவறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.
    Next Story
    ×