search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கறம்பக்குடியில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    மணல்குவாரி அமைக்க கோரி கறம்பக்குடியில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கறம்பக்குடி மழையூர் பகுதிகளில் மணல் குவாரி அமைத்துதரக் கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ) நகர தலைவர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் வீரமுத்து, மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    ஆப்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வருவாய்துறையினர் தமிழக அரசு மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு கறம்பக்குடி மழையூர் பகுதிகளில் மணல் குவாரி அமைத்து தரக்கோரி கோஷங்கள் எழுப்பி, வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

    இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×