search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிங்கப்பெருமாள் கோவில் அருகே டிரைவர் மீது மிளகாய் பொடி தூவி காரை கடத்திய 3 பேர் கைது

    சிங்கப்பெருமாள் கோவில் அருகே டிரைவர் மீது மிளகாய் பொடி தூவி காரை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றது.
    வண்டலூர்:

    சென்னை சைதாப்பேட்டை மேற்கு புது காலனி ஜோன்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷன் (வயது 41), இவர் நேற்று முன்தினம் சவாரிக்காக ஊரப்பாக்கத்தில் காத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் சிங்கப்பெருமாள்கோவில் வரை சவாரி செல்ல வேண்டுமென்று டிரைவரை அழைத்துள்ளனர்.

    இதையடுத்து அவர்களை சிங்கப்பெருமாள்கோவில் சவாரிக்காக ஏற்றிக் கொண்டு செல்லும் போது கூடுவாஞ்சேரி நெல்லிக்குப்பம் சாலை வழியாக கொண்டமங்கலம் வரை செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    அவர்கள் கூறியதை நம்பி கார் டிரைவர் கொண்டமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அடர்ந்த வனப்பகுதி சாலை வழியாக செல்லும்போது காரில் இருந்த 3 பேரும் டிரைவரை கத்தி முனையில் மிரட்டி கத்தியால் வெட்டிவிட்டு அவர் மீது மிளகாய் பொடி தூவி அவரிடம் இருந்த ரூ.400- ஐ பறித்து கொண்டனர். மேலும் காரை கடத்தி சென்றனர். இது குறித்து கார் டிரைவர் பிரியதர்ஷன் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் காரை கடத்தி சென்ற 3 பேரை கூடுவாஞ்சேரி அருகே வாகன சோதனையின்போது மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கூடுவாஞ்சேரியை சேர்ந்த அசோக் (வயது 21), விக்னேஷ் (வயது 19), 18 வயதான சிறுவன் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×