search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் பறிப்பு
    X
    பணம் பறிப்பு

    மண்ணிவாக்கத்தில் கடைக்காரரை மிரட்டி பணம் பறிப்பு

    மண்ணிவாக்கத்தில் கடைக்காரரை மிரட்டி பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் உமர்பரூக் (வயது 43), இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு செல்லும்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி ரூ.3 ஆயிரத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து ஓட்டேரி போலீசில் உமர்பரூக் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை தேடி வருகிறார்.
    Next Story
    ×