என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    காரைக்குடியில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொலை

    காரைக்குடியில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புலிகுத்தியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது44). திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். தற்போது மகாலிங்கம் செஞ்சை பகுதியில் வசித்து வருகிறார்.

    இவர் தேவகோட்டை ரஸ்தா பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். இன்று காலை 8 மணிக்கு வீட்டிலிருந்து ரஸ்தாவுக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மர்ம கும்பல் வந்தது.

    குடிகாத்தான்பட்டி கண்மாய் அருகே வைத்து வந்த போது மகாலிங்கத்தை மறித்த அந்த கும்பல் மோட்டார் சைக்கிளை கீழே தள்ளி, அவரை அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டியது.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

    இதுகுறித்து காரைக்குடி டி.எஸ்.பி. வினோஜி தலைமையில் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகாலிங்கத்திற்கும், ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு அப்பெண் இறந்துவிட்டார். அந்த இறப்பிற்கு மகாலிங்கம் தான் காரணம் என கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அந்த பெண்ணின் தம்பி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மகாலிங்கத்தை கடையில் ஆட்களுடன் வந்து மிரட்டி சென்றுள்ளார். அவர் இக்கொலையில் ஈடுபட்டிருப்பாரோ? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், மகாலிங்கத்தின் தந்தை பேத்தியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரை ஜாமீனில் எடுக்க மகாலிங்கம் முயற்சி செய்துள்ளார். ஜாமீனில் எடுக்க சகோதரி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தேவகோட்டையை சேர்ந்த கார்த்தி (34), சுந்தரபாண்டி (21) என்ற இருவர் காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×