என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதலியார்பேட்டையில் தொழிலாளி தற்கொலை- போலீசார் விசாரணை
Byமாலை மலர்26 July 2021 11:26 AM GMT (Updated: 26 July 2021 11:26 AM GMT)
முதலியார்பேட்டையில் மதுகுடிக்க தாய் பணம் கொடுக்க மறுத்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை பூந்தோட்ட வீதியை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மகன் சுரேஷ் என்ற சுப்புராயன்(வயது45). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார்.
இதனால் சுரேஷ் தனது தாய் ஜோதி மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார். இதற்கிடையே மது குடிக்கும் பழக்கமுள்ள சுரேஷ் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் தாயிடம் பணம் வாங்கி மதுகுடித்து வந்தார்.
இந்தநிலையில் அதுபோல் நேற்று மது குடிக்க சுரேஷ் தாயிடம் பணம் கேட்டார். ஆனால் ஜோதி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் தாயிடம் சுரேஷ் தகராறு செய்தார்.
இதையடுத்து ஜோதியும் அவரது மகளும் வீட்டின் ஒரு அறையில் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டனர். இதனால் மனமுடைந்த சுரேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டு வராண்டாவில் உள்ள மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதலியார்பேட்டை பூந்தோட்ட வீதியை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மகன் சுரேஷ் என்ற சுப்புராயன்(வயது45). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார்.
இதனால் சுரேஷ் தனது தாய் ஜோதி மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார். இதற்கிடையே மது குடிக்கும் பழக்கமுள்ள சுரேஷ் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் தாயிடம் பணம் வாங்கி மதுகுடித்து வந்தார்.
இந்தநிலையில் அதுபோல் நேற்று மது குடிக்க சுரேஷ் தாயிடம் பணம் கேட்டார். ஆனால் ஜோதி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் தாயிடம் சுரேஷ் தகராறு செய்தார்.
இதையடுத்து ஜோதியும் அவரது மகளும் வீட்டின் ஒரு அறையில் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டனர். இதனால் மனமுடைந்த சுரேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டு வராண்டாவில் உள்ள மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X