search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    கன்னியாகுடி ஊராட்சியில் தடுப்பூசி முகாம்

    திருமுல்லைவாசல் ஊராட்சியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே கன்னியாகுடி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அருண்மொழி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். தடுப்பூசி முகாமை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், தி.மு.க. மாவட்ட நிர்வாகி முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமுல்லைவாசல் ஊராட்சியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
    Next Story
    ×