என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு
Byமாலை மலர்23 July 2021 5:15 AM GMT (Updated: 23 July 2021 5:15 AM GMT)
அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவினை நிதித்துறை சார்பு செயலாளர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி:
கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி, ஜூலை 1-ந் தேதி, இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி என 3 தடவை வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதனால், இந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வுடன், மேற்கண்ட 3 தவணைகளையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்தநிலையில் 3 தவணை அகவிலைப்படி உயர்வையும், ஜூலை 1-ந் தேதி வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வுடன் சேர்த்து வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. இதன்படி அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இதேபோல் புதுவை அரசு ஊழியர்களுக்கும் அக விலைப்படி உயர்வு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து புதுவை அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவினை நிதித்துறை சார்பு செயலாளர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் சுமார் ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் உயரும்.
கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி, ஜூலை 1-ந் தேதி, இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி என 3 தடவை வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதனால், இந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வுடன், மேற்கண்ட 3 தவணைகளையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்தநிலையில் 3 தவணை அகவிலைப்படி உயர்வையும், ஜூலை 1-ந் தேதி வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வுடன் சேர்த்து வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. இதன்படி அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இதேபோல் புதுவை அரசு ஊழியர்களுக்கும் அக விலைப்படி உயர்வு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து புதுவை அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவினை நிதித்துறை சார்பு செயலாளர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் சுமார் ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் உயரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X