search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் முதுநகர் துறைமுகத்தில் மீன் வாங்க பொதுமக்கள் திரண்டு நிற்கும் காட்சி.
    X
    கடலூர் முதுநகர் துறைமுகத்தில் மீன் வாங்க பொதுமக்கள் திரண்டு நிற்கும் காட்சி.

    கடலூர் துறைமுகத்தில் கொட்டும் மழையில் மீன்வாங்க குவிந்த மக்கள்

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நேற்று 76 பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
    கடலூர்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பரவல் குறைந்து வரும் நிலையில் வருகிற ஜூலை 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நேற்று 76 பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

    இதனை தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு ஏராளமான பொது மக்கள் திரண்டனர். கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கொட்டும் மழையை பொருட்படுத்தாது பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் மீன் வாங்க கடலூர் துறைமுகத்தில் குவிந்தனர்.

    மேலும் படகில் மீன்பிடித்து வந்த மீனவர்களிடம் நேரடியாக பொதுமக்கள் தங்கள் தேவைக்கேற்ப மீன்களை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்து வாங்கி சென்றதை காண முடிந்தது.

    கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும் பெரும்பாலானோர் மீன்களை வாங்கிச் சென்றதை காணமுடிந்தது.

    இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மீண்டும் தொற்று நோய் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
    Next Story
    ×