search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் அணை
    X
    பவானிசாகர் அணை

    பவானிசாகர் அணை நீர்மட்டம் 94.78 அடியாக உயர்வு

    நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பல லட்சம் விவசாய விளை நிலங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

    நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 94.78 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,322 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 650 கனஅடி நீரும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடி வீதம் மொத்தம் 850 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் இன்று மாலைக்குள் பவானிசாகர் அணை 95 அடியை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×