என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்லியனூர் அருகே கேபிள் டி.வி. உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல்
Byமாலை மலர்14 July 2021 10:30 AM GMT (Updated: 14 July 2021 10:30 AM GMT)
வில்லியனூர் அருகே கேபிள் டி.வி. உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கண்டமங்கலத்தை அடுத்த நவமால்மருதூர் முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் மதிவாணன். இவர் கேபிள் டி.வி. நடத்தி வருகிறார்.
நேற்று காலை அரியூரில் கேபிள் வயர் துண்டிக்கப்பட்டு இருந்ததால் மதிவாணனும் அவருடன் வேலை பார்க்கும் விஜயன், சந்தோஷ், சுப்பிரமணியன் மற்றும் கணபதி ஆகியோருடன் கேபிள் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது பங்கூரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் கேபிள் இணைப்பு பணியில் இருந்தவர்களை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனை மதிவாணன் தட்டிக்கேட்டார். அப்போது சீனிவாசன் ஆபாசமாக பேசி மதிவாணன் முகத்தில் எச்சிலை துப்பினார். மேலும் அவரை தாக்கி கொலை செய்து விடுவேன் என்றும், இந்த பகுதியில் கேபிள் லைன்களை அறுத்து சேதப்படுத்தி விடுவேன் என்றும் சீனிவாசன் மிரட்டினார்.
இதுகுறித்து மதிவாணன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசனை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X