என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கீழ்பென்னாத்தூரில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு

    கீழ்பென்னாத்தூரில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூரில் அவலூர்பேட்டை ரோட்டில் வசிப்பவர் ஜி.சேகர் (வயது 65). இவர், தான் வசிக்கும் மாடி வீட்டின் தரைதளத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவரும், குடும்பத்தினரும் காற்று வசதிக்காக வீட்டின் கதவை பூட்டாமல் திறந்து வைத்த படி படுத்துத் தூங்கி கொண்டிருந்தனர்.

    நள்ளிரவு 12 மணிக்குமேல் மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து அறையில் இருந்த பீரோவை சாவியால் திறந்து, அதில் வைத்திருந்த பையை எடுத்துப் பார்த்துள்ளனர்.

    அந்தப் பையில் வைத்திருந்த ரூ.70 ஆயிரம், 3 பவுன் நெக்லஸ், அரை பவுன் மோதிரம் ஆகியவற்றை திருடிக்கொண்டு பக்கத்தில் வசிக்கும் ஜவுளிக்கடை உரிமையாளரான பாபு என்ற பாலசுப்ரமணியின் வீட்டின் மொட்டை மாடியில் பை மற்றும் திருடிய 3 செல்போன்கள் மற்றும் ஒருசில பொருட்களை வீசி விட்டு சென்றுள்ளனர்.

    இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் சேகர் கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு கைரேகை, தடயங்களை பதிவு செய்தனர். மேலும் திருட்டுச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×