என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலையை கடந்தபோது லாரியின் அடியில் சிக்கி உயிர்த்தப்பிய சிறுவன்
Byமாலை மலர்9 July 2021 2:02 AM GMT (Updated: 9 July 2021 2:02 AM GMT)
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சாலையை கடந்த 7 வயது சிறுவன் லாரியின் அடியில் சிக்கி உயிர்த்தப்பிய சம்பவம் நடந்தேறியுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள டவுன் பிச்சனூர்- பலமநேர் சாலையில் நேற்று முன்தினம் காலை 7 வயது சிறுவன் ஒருவன் சாலையின் ஒருபக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு வேகமாக ஓடி வந்தான். அப்போது ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மோதியது.
இந்த விபத்தில் சிறுவன் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டான். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் லாரியின் பின்பக்கத்தில் இருந்து அந்த சிறுவன் சிறு காயங்களுடன் எழுந்து வந்தான். லாரியின் நடுப்பகுதியில் சிக்கிக்கொண்டதால், லாரியின் சக்கரத்தில் சிக்காமல், அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியது தெரியவந்தது.
அக்கம்பக்கத்தினர் அந்த சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பிவைத்தனர். இந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இந்த பதிவுகளை அந்த கடைக்காரர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் லாரியில் சிக்கிய சிறுவன் உயிர் தப்பிய காட்சி வைரலானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X