என் மலர்tooltip icon

    செய்திகள்

    நூல் மில்லில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து அணைத்த காட்சி.
    X
    நூல் மில்லில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து அணைத்த காட்சி.

    சென்னிமலை நூல் மில்லில் தீ விபத்து

    சென்னிமலையில் நூல் மில்லில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.

    சென்னிமலை:

    சென்னிமலையில் உள்ள அம்மாபாளையத்தில் வசிப்பவர் சண்முகசுந்தரம். இவர் சென்னிமலையை அடுத்த ஈங்கூர் பகுதியில் சிப்காட் செல்லும் வழியில் வெள்ளியங்காடு தோட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடோனை வாடகைக்கு பிடித்து நூல் மில் தொடங்கினார்.

    இங்கு பனியன் வேஸ்ட் காட்டன் பஞ்சிலிருந்து நூல் தயாரித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த இந்த மில்லில் தற்போது வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் வழக்கம்போல் மில்லில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது ஸ்பின்னிங் எந்திரத்தில் இருந்து தீப்பொறி வந்ததை தொழிலாளர்கள் பார்த்தனர். உடனே அது அருகிலிருந்த பஞ்சில் பற்றி எரிய தொடங்கியது. பின்னர் எல்லா இடங்களிலும் பரவியது. இதைப்பார்த்த தொழிலாளர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியதால் அவர்களால் அணைக்க முடியவில்லை.

    இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கிருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். இரவு வரை போரடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான பஞ்சு பேல்களும், நூல் கோன்களும், எந்திரங்களும் எரிந்து நாசமானது. மின் கசிவால் இந்த தீ விபத்து நடந்தது தெரியவந்தது. மேலும் இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Next Story
    ×