என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபர் கைது

    காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் தனியார் கல்லூரி பின்புறம் காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி தனியார் கல்லூரி பின்புறம் காவிரி ஆற்றில் மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மணலுடன் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை ஓட்டிவந்த மன்னம்பந்தல் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த கிட்டப்பா மகன் கீர்த்திகேயன் (வயது 21) என்பவரை கைது செய்தனர்.
    Next Story
    ×