search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருமணத்திற்கு பெண் கொடுக்க மறுத்த தாய் மீது தாக்குதல் - வாலிபர் கைது

    தா.பழூர் அருகே திருமணத்திற்கு பெண் கொடுக்க மறுத்த தாய் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் சிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி அல்லிபாப்பா(வயது 42). இவர்களுடைய மகளை, அதே பகுதியை சேர்ந்த சாமிதுரையின் மகன் வீரபாண்டியன்(36) திருமணம் செய்து கொள்ள, கடந்த நான்கு ஆண்டுகளாக பெண் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

    ஆனால் அல்லிபாப்பா- ராஜேந்திரன் தம்பதி, பெண் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, நேற்று முன்தினம் மாலை வயலுக்கு சென்றுவிட்டு பண்டாரத்தார் காடு அருகே ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த அல்லிபாப்பாவை, வீரபாண்டியன் தகாத வார்த்தைகளால் திட்டி அருகில் கிடந்த கட்டையால் தாக்கியதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து, அல்லிபாப்பாவை மீட்டனர். இைதயடுத்து அவர் சிகிச் ைசக்காக ெஜயங்ெகாண்டம் அரசு மருத்துவமனையில் ேசர்க்கப்பட்டார். தனக்கு பெண் கொடுக்காவிட்டால் கொல்லாமல் விடமாட்டேன் என்று வீரபாண்டியன் மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசில், அல்லிபாப்பா கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து, வீரபாண்டியனை கைது செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×