என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வேளாங்கண்ணி அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி

    வேளாங்கண்ணி அருகே படகு கவிழ்ந்து மீனவர் பரிதாபமாக இறந்தார். அவரை காப்பாற்ற முயன்றவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
    வேளாங்கண்ணி:

    நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவருடைய மகன்கள் கிருபா, மதி, மதன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் கோபு, இபிதன், சுவாமிநாதன், சுபாஷ், கண்ணன் மகன் தினேஷ்(வயது 23) ஆகியோர் மீன்பிடிப்பதற்காக நேற்று அதிகாலை கடலுக்கு சென்றனர்.

    மீன்பிடித்துவிட்டு நேற்று மதியம் 12 மணி அளவில் வேளாங்கண்ணி கடற்கரை ஓரம் படகை நிறுத்துவதற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் படகு கவிழ்ந்தது. இதில் மதன், தினேஷ் ஆகிய 2 பேரும் படகுக்கு அடியில் சிக்கினர்.

    இதையடுத்து அருகில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த வேளாங்கண்ணி ஆரியநாட்டு தெரு பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் ஸ்டீபன் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவரும் காயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்த சக மீனவர்கள் மதன், ஸ்டீபன், தினேஷ் ஆகிய 3 பேரையும் மீட்டு நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது தினேஷ் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. ஸ்டீபன், மதன் ஆகிய இருவருக்கும் காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வேளாங்கண்ணி கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×