search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    வேலூர் அருகே விபத்தில் வாலிபர் பலி

    வேலூரில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    வேலூர்:

    வேலூர் அடுத்த நம்பிராஜபுரம் இந்திராநகரை சேர்ந்தவர் அஜித் (வயது 23). இவர் சம்பவத்தன்று தனது நண்பரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் காட்டுப்புத்தூர் நோக்கி சென்றார்.

    காட்டுப்புத்தூர் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு வேலூரில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கும் அதன்பிறகு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

    இதுகுறித்து அரியூர் போலீசில் அவரது மனைவி சிம்ரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×