search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணியிடை நீக்கம்
    X
    பணியிடை நீக்கம்

    தொழிலாளியை காலால் உதைத்த 2 போலீசார் பணியிடை நீக்கம்

    ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு சேகர் மற்றும் போலீஸ்காரர் சுரேஷ்குமார் ஆகிய இருவரும் பாலமுருகனை தாக்கி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 15-ந் தேதி அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 மளிகை பொருள் தொகுப்பினை உடனடியாக வழங்குமாறு ரேஷன் கடை ஊழியருடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது, அங்கு பணியில் இருந்த ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு சேகர் மற்றும் போலீஸ்காரர் சுரேஷ்குமார் ஆகிய இருவரும் பாலமுருகனை தாக்கி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்தநிலையில் பாலமுருகனின் உறவினர்கள் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவினை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அதில் போலீசார் இருவரும் பாலமுருகனை பூட்ஸ் காலால் உதைத்து தாக்கியது தெரியவந்தது.

    இதுகுறித்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் விசாரணை மேற்கொண்டு போலீஸ் ஏட்டு சேகர் மற்றும் முதல்நிலை போலீஸ்காரர் சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
    Next Story
    ×