search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 15 பேர் பலி

    வேலூர் மாவட்டத்தில் பரிசோதனைகளின் முடிவில் 63 பேருக்கு தொற்று உறுதியானது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 15 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 36 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையில் நேற்றைய பரிசோதனைகளின் முடிவில் 63 பேருக்கு தொற்று உறுதியானது.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த 4 பேர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்கள்.

    இந்த நிலையில் நேற்று அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 15 பேர் பலியானார்கள். வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவினால் 46 ஆயிரத்து 453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 45 ஆயிரத்து 167 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 197 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 300-க்கும் குறைவான நபர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 55 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும். நேற்று 6 பேர் உயிரிழந்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றின் காரணமாக நேற்று ஒருவர் உயிரிழந்தார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. மேலும் நேற்று 4 பேர் உயிரிழந்தனர்.
    Next Story
    ×