என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு-மொடக்குறிச்சி பகுதியில் பரவலாக பெய்த மழை
Byமாலை மலர்23 Jun 2021 9:56 AM GMT (Updated: 23 Jun 2021 9:56 AM GMT)
மொடக்குறிச்சி, சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. காலை தொடங்கி மாலை வரை வெயிலில் தாக்கதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தி வாங்கியது. மாநகர் பகுதியில் நேற்று இரவு 10.40 மணிக்கு மேல் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழை வெளுத்து வாங்கியது.
இதேப்போல் மொடக்குறிச்சி, சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-15, மொடக்குறிச்சி-15, சென்னிமலை-5, பவானிசாகர்- 1.2.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X