என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வில்லியனூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
புதுச்சேரி:
கும்பகோணம் பட்டீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 60). இவர் தனது முதல் கணவரை விட்டு பிரிந்து கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சாந்தகுமார் (50) என்பவரை 2-வது திருமணம் செய்தார்.
சாந்தகுமாருடன் மஞ்சுளா வில்லியனூர் உளவாய்க்கால் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
மரம் ஏறும் தொழில் செய்து வந்த சாந்தகுமார் பின்னர் அந்த தொழிலை கைவிட்டு டைல்ஸ் போடும் வேலைக்கு சென்று வந்தார். சாந்தகுமாருக்கு குடி பழக்கம் இருந்து வந்தது. இதற்கிடையே குழந்தை இல்லாததால் சாந்த குமார் விரக்தியில் அளவுக்கு அதிகமாக குடித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மஞ்சுளா உருவையாறில் வசிக்கும் தனது அக்காள் சரோஜா வீட்டுக்கு சென்றார். பின்னர் மதியம் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கூரையின் இரும்பு பைப்பில் சாந்தகுமார் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து மஞ்சுளா வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்