என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பவானிசாகர் அணை நீர்மட்டம் 93.10 அடியாக உயர்வு
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. மேலும் பில்லூர் அணையில் இருந்தும் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் கடந்த வாரம் பவானிசாகர் அணைக்கு 6 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்தது.
இந்த நிலையில் ஊட்டி மற்றும் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது.
பவானிசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2 ஆயிரத்து 944 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணை நீர் மட்டம் 93.10 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 23 ஆயிரத்து 661 டி.எம்.சியாக உள்ளது.
அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்காலுக்கு 800 கனஅடி மற்றும் குடிநீருக்கு 200 கனஅடி என 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்