என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓசூரில் ரவுடி கொலை வழக்கில் 2 பேர் கைது
Byமாலை மலர்20 Jun 2021 12:48 PM GMT (Updated: 20 Jun 2021 12:48 PM GMT)
ஓசூரில் ரவுடி கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த நல்லூர் ராஜாஜி லே அவுட்டை சேர்ந்தவர் அபி என்கிற அபிலாஷ் (வயது 29). ரவுடியான இவர் மீது 2 கொலை, ஒரு கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் உள்ளன. மேலும் குண்டர் சட்டத்திலும் சிறையில் இருந்துள்ளார். கொலை முயற்சி வழக்கில் கடந்த 10-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இந்தநிலையில், கடந்த 17-ந் தேதி இரவு பேடரப்பள்ளியில் அவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் ஓசூர் பேடரப்பள்ளியை சேர்ந்த சபரிசிங் (29), கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியை சேர்ந்த நவீன் (31), ஓசூர் கோவிந்த அக்ரஹாரத்தை சேர்ந்த முரளி (29) ஆகியோர் அபிலாசை கொலை செய்தது தெரியவந்தது. பண விவகாரத்தில் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சபரிசிங், முரளி ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள நவீனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X