என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு
Byமாலை மலர்20 Jun 2021 12:01 PM GMT (Updated: 20 Jun 2021 12:01 PM GMT)
கோவில் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரமங்கலம்:
குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை மது எடுப்புத்திருவிழாவும், வாரந்தோறும் வழிபாடுகளும் நடத்தப்படும். தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் வாராந்திர பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழக்கம் போல பூஜைகள் செய்ய அதே ஊரை சேர்ந்த பூசாரி வேலாயுதம் (வயது 62) என்பவர் கோவிலுக்கு வந்த போது கோவில் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, கருவறை பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தன. இது குறித்து அவர் கிராமத்தினருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து கிராம மக்கள் வந்து பார்த்தபோது, சாமி கழுத்தில் கிடந்த தங்க தாலி, மணிகள், காசுகள், சங்கிலி உள்ளிட்ட சுமார் 4 பவுன் தங்க நகைளும், உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து பூசாரி வேலாயுதம் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X