என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் சட்டவிரோதமாக மது விற்ற 214 பேர் கைது
Byமாலை மலர்20 Jun 2021 10:05 AM GMT (Updated: 20 Jun 2021 10:05 AM GMT)
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 214 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 53 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேரடிப்பார்வையில் போலீசார் மதுவிலக்கு தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், கடந்த 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையிலான 10 நாட்களில் மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி மது மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் சம்பந்தப்பட்ட 214 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தமிழ்நாட்டு மதுபானங்கள் 1,311 பாட்டில்களும், கர்நாடக மதுபானங்கள் 6 ஆயிரத்து 310 பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் 122 லிட்டர் சாராயம், 3 ஆயிரத்து 350 லிட்டர் சாராய ஊறல், 250 லிட்டர் கள் ஆகியவைகளும் மற்றும் ரூ.40 ஆயிரத்து 870 பறிமுதல் செய்யப்பட்டன. இது சம்பந்தமாக மேலும் 36 இருசக்கர வாகனங்கள், 16 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு லாரி என மொத்தம் 53 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்பட உள்ளன.
கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வது தெரிந்தால் 96558 88100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X