search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிராமத்தில் வசித்து வரும் தம்பதி
    X
    கிராமத்தில் வசித்து வரும் தம்பதி

    ஒரே தம்பதி வசிக்கும் கிராமம்

    சுபாஸ்சந்திரபோஸ் என்ற வைத்தியர் மட்டும், தனது மனைவியுடன் அந்த கிராமத்தில் வசித்து வருகிறார்.
    காரியாபட்டி:

    திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் குச்சம்பட்டி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்த பகுதியில் மழை இல்லாத காரணத்தினால் விவசாயம் எதுவும் செய்ய முடியாத நிலை இருந்து வந்ததால் இந்த மக்கள் வாழ வழியின்றி பிழைப்பைத்தேடி பல்வேறு ஊர்களுக்கு தங்களது வீடுகளை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் சுபாஸ்சந்திரபோஸ் என்ற வைத்தியர் மட்டும், தனது மனைவியுடன் அந்த கிராமத்தில் வசித்து வருகிறார். ஊரே காலியான பின்பு இந்த ஒருவர் மட்டும் ஊருக்கு காவலாளியாக ஊரை காத்து வருகிறார்.

    ஊரை காலி செய்துவிட்டு சென்ற மக்கள் வருடத்திற்கு ஒருமுறை அங்கு உள்ள மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    76 வயதாகும் சுபாஸ்சந்திரபோஸ் வைத்தியராக உள்ளார். இவர் தனது வீடு மிகவும் பழுதடைந்து குடியிருக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. ஊரை காத்து வரும் எனக்கு தமிழக அரசு வீடு கட்டி தர வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    Next Story
    ×