search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி போட வரிசையில் நின்ற ஆண்கள்.
    X
    தடுப்பூசி போட வரிசையில் நின்ற ஆண்கள்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்

    மாவட்டத்தில் 150 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 50 கோவேக்சின் தடுப்பூசிகளும் போடப்பட்டன. இதையொட்டி கொடுமுடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
    ஈரோடு:

    கொடுமுடியில் உள்ள ஸ்ரீ சங்கரர் வித்யாசாலா மேல்நிலைப்பள்ளியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக நேற்று அதிகாலை 3.30 மணி முதலே பொதுமக்கள் பள்ளிக்கூடம் முன்பு குவிந்தனர். இதில் 200 பேருக்கு மட்டும் நேற்று காலை 6.30 மணி அளவில் ேடாக்கன் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் வரிசையாக நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். சுகாதார மருத்துவர் பிரியங்கா மற்றும் செவிலியர்கள் தடுப்பூசிகளை போட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலர் விஜய்நாத் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் செய்திருந்தார்கள். இதேபோல் சோளக்காளிபாளையத்தில் உள்ள சென்னசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு முதலில் வந்திருந்த பொதுமக்கள் 200 பேருக்கு சுகாதார ஆய்வாளர் வசந்தகுமார் நேற்று காலை 6.30 மணி அளவில் டோக்கன் கொடுத்தார். பின்னர் அவர்களுக்கு டாக்டர் தீபிகா தடுப்பூசி போட்டார். இங்கு 150 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 50 கோவேக்சின் தடுப்பூசிகளும் போடப்பட்டன. இதையொட்டி கொடுமுடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

    இதேபோல் சத்தியமங்கலம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தடுப்பூசி முகாம் நடந்தது. தடுப்பூசி போடுவதற்காக நேற்று அதிகாலை 5 மணிக்கே வந்து பொதுமக்கள் காத்திருந்தனர். இதில் முதலில் வந்த 300 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது.

    அதேபோல் உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 300 பேருக்கு மட்டுமே டோக்கன் கொடுக்கப்பட்டு், தடுப்பூசி போடப்பட்டது. டோக்கன் கிடைக்காத பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு 150 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 50 கோவேக்சின் தடுப்பூசிகளும் வந்துள்ளன. இதைத்தொடர்ந்து நேற்று இங்கு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. தடுப்பூசி போட டோக்கன் பெறுவதற்காக நேற்று அதிகாலை 3 மணி அளவிலேேய திரளான பொதுமக்கள் ஆஸ்பத்திாிக்கு வந்து காத்திருந்தனர். இதைத்தொடர்ந்து முதலில் வந்த 200 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு், தடுப்பூசி போடப்பட்டது. டோக்கன் கிடைக்காதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    நம்பியூர், கெட்டிசெவியூர், எலத்தூர், மலையபாளையம் ஆகிய 4 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போட அதிகாலை 5 மணி முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். முதலில் வந்த 200 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.

    தடுப்பூசி போடுவதற்கான பணிகளை நம்பியூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மொழி செய்திருந்தார். இதையொட்டி நம்பியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அம்மாபேட்டை வட்டாரத்தில் அம்மாபேட்டை, குருவரெட்டியூர், வெள்ளித்திருப்பூர், ஒலகடம், ஆலம்பாளையம், ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. இதற்காக பொதுமக்கள் அதிகாலை முதலே தடுப்பூசி போடும் இடங்களுக்கு சென்று டோக்கன் பெற்றுக்கொண்டனர். பின்னர் வரிசையில் நின்று ஆர்வமுடன் தடுப்பூசி போட்டனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இருபிரிவுகளாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    இதில் அம்மாபேட்டை, குருவரெட்டியூர், வெள்ளித்திருப்பூர், ஒலகடத்தில் தலா 200 பேருக்கும், ஆலாம்பாளையத்தில் 150 ேபருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×