search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கைது செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம்

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அண்ணாதுரை (50) என்பவர் பணியாற்றி வந்தார்.

    இவரிடம் கடந்த 2010-2018 வரை அந்த பள்ளியில் படித்த ஒரு மாணவி உடற்கல்வி பயின்ற போது உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும், பாலியல் தொல்லை செய்ததாகவும் கூறி, பள்ளிப்படிப்பை முடித்து தற்போது கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வரும் 21 வயது மாணவி போலீசில் புகார் அளித்தார்.

    மேலும் 2008, 2016-க்கு முன்பு படித்த 2 மாணவிகள் தங்களுக்கும் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை பாலியல் தொல்லை கொடுத்ததாக மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

    இதனையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார், உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரையை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் அண்ணாதுரையை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

    Next Story
    ×