என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
பவானி அருகே 2 கிராமங்களை சேர்ந்த 100 பேருக்கு கொரோனா
கிராமமக்களும் வெளியே செல்லாமல் இருக்க அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது மயிலம்பாடி ஊராட்சி. இங்குள்ள கல்வநாயக்கனூர் பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஏராளமான பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறைக்கு தகவல் சென்றது. இதைத்தொடர்ந்து சுகாதார அலுவலர்கள் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் 438 பேருக்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
மேலும் அந்த கிராமத்தை ஒட்டியுள்ள காட்டாம்பாளையம் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியிலும் 80 பேருக்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது.
இதில் 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட 100 பேரும் அந்தியூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் 2 கிராமங்களிலும் வெளி ஆட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
அதேபோல் கிராமமக்களும் வெளியே செல்லாமல் இருக்க அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
Next Story






