search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபாடம்
    X
    கோப்புபாடம்

    மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சிய-மதுவிற்ற 10 பேர் கைது

    மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சிய-மதுவிற்ற 10 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
    ஈரோடு:

    சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அரியப்பம்பாளையத்தில் சிலர் சாராயம் காய்ச்சி கள்ளத்தனமாக வியாபாரம் செய்வதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா தலைமையில் போலீசார் அங்கு சென்றார்கள். அப்போது அங்கு 4 பேர் சாராயம் காய்ச்சிக்கொண்டு இருந்தார்கள். உடனே போலீசார் அவர்களை சுற்றிவளைத்தார்கள். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சேகர் (வயது 49), சுப்பிரமணி (38), விஸ்வநாதன் (23), சண்முகம் (39) ஆகியோர் என்பது தெரியவந்தது. உடனே 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சிலிண்டர், அடுப்பு, பானை, அலுமினிய பாத்திரங்கள், 200 லிட்டர் சாராய ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்கள

    அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் பாலமலை அடிவார பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக அம்மாபேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு 9.30 மணி அளவில் குருவரெட்டியூர் அருகே உள்ள பாலமலை பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அந்த பகுதியில் இரு சக்கர வாகனத்தில் 2 வாலிபர்கள் 2 கேன்களுடன் சென்று கொண்டிருந்ததை பார்த்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் வைத்திருந்த கேனை வாங்கி திறந்து பார்த்தனர். அதில் தலா 5 லிட்டர் சாராயம் என மொத்தம் 10 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் அவர்கள் குருவரெட்டியூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சஞ்சய் (வயது 23) என்பதும், பூதப்பாடி அடுத்துள்ள எஸ்.பி.குள்ளனூரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் கலையரசன் (22) என்பதும், 2 பேரும் சாராயம் காய்ச்சி அதை ஊரடங்கில் விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் தலையம்பாளையத்தில் ஒருவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தலையம்பாளையத்தில் உள்ள சரவணன் (வயது 35) என்பவருடைய வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது வீட்டுக்குள் 11 கர்நாடக மதுபாட்டில்கள் பதுக்கிவைத்திருந்தது தெரிந்தது.

    இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சரவணனை கைது செய்து, 11 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தார்கள்.

    இதேபோல் போலீசார் பெருந்துறை சுள்ளிப்பாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சுள்ளிப்பாளையம் வெற்றிநகரைச் சேர்ந்த ராஜேந்திரன் (53) என்பவர் ஸ்கூட்டரில் விற்பனைக்காக 20 மதுபாட்டில்களை கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தார்கள்.

    பங்களாப்புதூர் போலீசார் டி.ஜி.புதூர் நால் ரோட்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் கையில் ஒரு கேனும் இருந்தது. இதனால் போலீசார் அவர்களை தடுத்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். உடனே போலீசார் அவர்கள் கையில் வைத்திருந்த கேனை திறந்து பார்த்தார்கள். அதில் 5 லிட்டர் எரிசாராயம் இருந்தது. மேலும் விசாரணையில், அவர்கள் பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது 32), கே.என்.பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (40) ஆகியோர் என்பதும், இவர்கள் 2 பேரும் எரிசாராயத்தை விற்பனைக்காக கடத்திக்கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த எரிசாராயத்தையும், மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தார்கள்.

    Next Story
    ×