search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    புதுவையில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை

    புதுவையில் 42 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு மதுபான கடைகள் நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டது.

    காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. மதுபார்கள், சுற்றுலா பிரிவு பார்களை திறக்க அனுமதியில்லை.

    42 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் வரிசையில் காத்திருந்து மதுபானங்களை மது பிரியர்கள் வாங்கிச் சென்றனர்.

    இதனால் மதுக்கடைகளில் விற்பனையும் அதிகமாக இருந்தது. வழக்கமாக ஒரு நாளில் புதுவை மாநிலம் முழுவதும் சுமார் ரூ.4 கோடிக்கு மதுபானம் விற்பனையாகும். நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மதுபானம் விற்பனையானது.

    Next Story
    ×