search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தொடர்ந்து 2-வது நாளாக 500-க்கு கீழ் பதிவான கொரோனா பாதிப்பு - 9 பேர் பலி

    கடலூர் மாவட்டத்தில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 463 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 52 ஆயிரத்து 558 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 47 ஆயிரத்து 17 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருந்த நிலையில், 593 பேர் பலியாகி இருந்தனர். நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 463 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சென்னை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய இடங்களில் இருந்து கடலூர் வந்த 6 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 45 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 412 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 29 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் கொரோனாவுக்கு 9 பேர் பலியாகியுள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:-

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட விருத்தாசலத்தைச் சேர்ந்த 59 வயது நபர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 50 வயது நபர் நெய்வேலி என்.எல்.சி. மருத்துவமனையிலும், மங்களூரை சேர்ந்த 59 வயது நபர் மற்றும் 58 வயது பெண் ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 55 வயது பெண் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 60 வயது நபர், பரங்கிப்பேட்டையை சேர்ந்த 74 வயது முதியவர், புவனகிரியை சேர்ந்த 33 வயது பெண் ஆகியோர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மங்களூரை சேர்ந்த 65 வயது பெண் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் அவர்கள் 9 பேரும் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் பலியானோர் மொத்த எண்ணிக்கை 602 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று 516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 4,246 பேர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், 648 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 180-ல் இருந்து 177 ஆக குறைந்துள்ளது.
    Next Story
    ×