என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி - புதிதாக 496 பேருக்கு தொற்று உறுதி
Byமாலை மலர்8 Jun 2021 2:44 AM GMT (Updated: 8 Jun 2021 2:44 AM GMT)
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 4,329 பேர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், 619 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 52 ஆயிரத்து 61 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 46 ஆயிரத்து 432 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருந்த நிலையில், 588 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:-
கொரோனாவால் பாதிக்கப்பட்ட என்.எல்.சி. பகுதியை சேர்ந்த 57 வயது நபர் செங்கல்பட்டு தனியார் மருத்துவமனையிலும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 35 வயது வாலிபர், கடலூரை சேர்ந்த 55 வயது பெண், அண்ணாகிராமத்தை சேர்ந்த 61 வயது முதியவர் ஆகியோர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையிலும், விருத்தாசலத்தைச் சேர்ந்த 45 வயது நபர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் அவர்கள் 5 பேரும் நேற்று சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 496 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து கடலூர் வந்த 4 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 49 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 443 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்து 558 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று 585 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 4,329 பேர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், 619 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 52 ஆயிரத்து 61 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 46 ஆயிரத்து 432 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருந்த நிலையில், 588 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:-
கொரோனாவால் பாதிக்கப்பட்ட என்.எல்.சி. பகுதியை சேர்ந்த 57 வயது நபர் செங்கல்பட்டு தனியார் மருத்துவமனையிலும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 35 வயது வாலிபர், கடலூரை சேர்ந்த 55 வயது பெண், அண்ணாகிராமத்தை சேர்ந்த 61 வயது முதியவர் ஆகியோர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையிலும், விருத்தாசலத்தைச் சேர்ந்த 45 வயது நபர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் அவர்கள் 5 பேரும் நேற்று சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 496 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து கடலூர் வந்த 4 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 49 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 443 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்து 558 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று 585 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 4,329 பேர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், 619 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X