search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனுமதி பெறாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை
    X
    அனுமதி பெறாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைக்கு பூட்டு

    சிதம்பரத்தில் உரிய அனுமதிபெறாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் உசுப்பூரில் உள்ள முருகேசன் நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு, அரசு அனுமதி பெறாமல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிதம்பரம் சப்-கலெக்டர் மது பாலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், கிராம நிர்வாக அலுவலர்கள் சிதம்பரம் ரமேஷ், உசுப்பூர் சங்கரன், சிதம்பரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் மற்றும் அதிகாரிகள் முருகேசன் நகரில் இயங்கி வந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று, விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் அவர்களுக்கு போதிய அளவில் ஆக்சிஜன் வசதி எதுவும் செய்து கொடுக்காமலும், உரிய அனுமதி பெறாமலும் சிகிச்சை அளித்தது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கிருந்த 6 பேரையும் ஆம்புலன்ஸ் மூலமாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். மேலும் சப்-கலெக்டரிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரையில் மருத்துவமனையை திறக்க கூடாது என்று அங்கிருந்த டாக்டரை அதிகாரிகள் எச்சரித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×