என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்னம் பகுதி கிராமங்களில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
Byமாலை மலர்5 Jun 2021 2:44 PM GMT (Updated: 5 Jun 2021 2:44 PM GMT)
வன்னியருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி குன்னம் பகுதி கிராமங்களில் உள்ள வீடுகளில் மக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஆண்டி குரும்பலூர், சின்ன பரவாய், பரவாய், வைத்தியநாதபுரம், பென்னகோணம், கிழுமத்தூர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து தேவையற்ற காரணங்களை கூறி மக்களை ஏமாற்றக்கூடாது என்றும், இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் 6 கிராமங்களில் சுமார் 800-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. மேலும் வீதிகளில் பொதுமக்கள் கருப்பு கொடியேந்தி கோரிக்கையை வலியுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் கருப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ள கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X