search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல்
    X
    மணல்

    மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

    மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
    விக்கிரமங்கலம்:

    விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் அரங்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரங்கோட்டை மெயின் ரோட்டின் வழியாக வந்த 2 மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். இதில் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த 2 பேர், மாட்டு வண்டிகளை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார், மாட்டு வண்டிகளை சோதனை செய்தபோது அரங்கோட்டை கொள்ளிடம் ஆற்றுப் படுகை பகுதியில் இருந்து ஸ்ரீபுரந்தான் பகுதிக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×