என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் கிராமமக்கள்
Byமாலை மலர்3 Jun 2021 11:09 AM GMT (Updated: 3 Jun 2021 11:09 AM GMT)
மின்மோட்டார் பழுதடைந்ததால் தண்ணீர் கிடைக்காத கிராம மக்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வேறுபகுதியில் இருந்து குடிநீர் எடுத்து வருகின்றனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா, கவரகொளப்படி கிராமத்தில் பாரதியார் நகர் உள்ளது. இங்கு, 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதி மக்களுக்கு பொது நிதி திட்டத்தின் கீழ் 2013-14-ம் ஆண்டில் ரூ.3½ லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் நிரப்பி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 4 மாதமாக ஆழ்துளை கிணறு மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை. இதனால், குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து விளந்தை ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளிக்கப்பட்டதன்பேரில், மின் மோட்டாரை பழுது பார்க்க வந்தவர்கள் ஆள்துளை கிணற்றில் மணல் இறங்கி உள்ளதாக கூறி சென்று விட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
தற்போது வெயில் கடுமையாக இருப்பதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். வேறு வழியின்றி இங்கிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சென்று விவசாய நிலங்களில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பெண்கள் மிகவும் சோர்வடைகின்றனர். ஆகவே, இப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X