என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
யாரைகேட்டு செக்போஸ்ட் போட்டிருக்கீங்க- கண்காணிப்பு பணியில் இருந்த போலீசாரை அவதூறாக பேசிய வாலிபர்கள்
வேலூர்:
கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு இடையே இ-பதிவு பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 57 இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூர் - வேலூர் மாவட்ட எல்லையான மாதனூர் பகுதியில் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்ட போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் வாலிபர்கள் 6 பேர் இருந்தனர். அவர்களிடம் இ-பதிவு பாஸ் கேட்டனர்.
ஆனால் காரில் இருந்த 6 பேரும் மதுபோதையில் இருந்தனர். அவர்களில் ஒருவர் யாரை கேட்டு செக் போஸ்ட் போட்டு இருக்கீங்க, உங்களை சும்மா விட மாட்டேன் என ஆவேசமாக பேசினார்.
மேலும் கண்காணிப்பு பணியில் இருந்த போலீசாரை அவதூறாக பேசினர். போலீசாரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவலறிந்து வந்த இளைஞர்களின் பெற்றோர் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டு மதுபோதையில் இருந்த 6 பேரையும் அழைத்து சென்றனர்.
விசாரணையில் குடித்துவிட்டு ஒரே காரில் வந்த 6 பேரும் மாதனூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் அப்பகுதியில் வீணாக சுற்றி வருவதாகவும் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்