என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் நகராட்சி பொறியாளர் மீது தாக்குதல் - டிரைவர் உள்பட 2 பேர் கைது
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சியில் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் பிரதான் பாபு (வயது 43).
இவர் முக்கிய பிரமுகர் வருவதை ஒட்டி இரண்டு தெருக்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்க நகராட்சி பணியாளர் ஒருவரை நியமித்து உள்ளார். அந்த நபரை நகராட்சியில் லாரி டிரைவராக பணிபுரியும் சுப்பையா (44) என்பவர் வேறு பணிக்கு அழைத்துச் சென்று விட்டாராம்.
இதுகுறித்து பொறியாளர் பிரதான் பாபு, சுப்பையாவிடம் கேட்டபோது, ஆத்திரமடைந்த சுப்பையா பிரதான் பாபுவை தாக்கியுள்ளார்.
மேலும் சுப்பையா தன் சகோதரர் வீரபாண்டியனுக்கு (46) அவருக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்து அவரும் நகராட்சி அலுவலக பகுதிக்குள் வந்து பிரதான் பாபு தரக்குறைவாக பேசினாராம்.
பொறியாளர் பிரதான் பாபு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் டி.எஸ்.பி. மகாதேவன் அறிவுரையின் படி இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பையா, வீரபாண்டி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.






