என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குழந்தை பெற்றெடுத்த 9-ம் வகுப்பு மாணவி: சித்தப்பா கைது
Byமாலை மலர்28 May 2021 2:06 AM GMT (Updated: 28 May 2021 2:06 AM GMT)
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி கற்பழித்த சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த தந்தையை இழந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் தீப்பெட்டி ஆலையில் வேலை பார்க்கும் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அந்த மாணவியுடைய தாயின் தங்கை கணவர் மாணவியை மிரட்டி கற்பழித்து வந்துள்ளார்.
அந்த மாணவி கர்ப்பமானாள். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் மாணவியிடம் விசாரித்தபோது, தன்னை சீரழித்தது சித்தப்பா என்று கூறாமல் மறைத்து வந்தார். இந்த நிலையில் மாணவிக்கு பிரசவ வலி ஏற்படவே திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.
இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு மாணவியிடம் ரகசியமாக விசாரணை நடத்தினர். அப்போது தன்னை சித்தப்பா மிரட்டி பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அதனால் தான் கர்ப்பமானதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து 9-ம் வகுப்பு மாணவியை சீரழித்த சித்தப்பாவை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X