என் மலர்
செய்திகள்

மரணம்
வடலூரில் செல்போன் பேசிய வியாபாரி இடி தாக்கி பலி
கடலூர் மாவட்டம் வடலூரில் செல்போன் பேசிய வியாபாரி இடி தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 32). இவர் வடலூரில் பாத்திர கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று இரவு ராமலிங்கம் வடலூர் சத்திய ஞானசபை அருகில் உள்ள திறந்த வெளியில் அமர்ந்து செல்போன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசியது. இதில் மின்னல் தாக்கியதில் உடல் கருகி ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராமலிங்கம் உடலை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story






